முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிற்றூர்களில் கொரோனா ஏற்படுத்திய உளவியல் அசைவு!

எளிய மக்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. அதே போல் தான் அவர்களின் நம்பிக்கையை உடைப்பதும். மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று நகரங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த சுமார் ஒரு மாத காலம் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் உட்பட நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்களே கூட அலட்சியமாக நடந்து கொண்டதை பார்த்தோம். மொட்டை மாடியில் நின்று கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது, மீம்ஸ் போடுவது, கொரோனாவை வைத்து ஒரு முமு நீள காமெடி திரைப்படம் எடுக்கும் அளவிற்கு இளைஞர்கள் தங்கள் எல்லையற்ற சித்தரிப்புகளை செய்தனர். கொரோனாவையும் கிள்ளுக் கீரையாக நினைத்ததற்கு மீம்ஸ் ஒரு முக்கிய காரணம். பிறகு நகரத்தார் சற்று சுதாரித்தனர். வீட்டிற்குள் முடங்கினர். ஆனால் கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அவர்களின் வெள்ளந்தி மனசு போலவே இருந்து வந்தனர். அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். கிராம மக்கள் அவ்வளவு எளிதில் அடுத்தவரிடம் அடி பணிய மாட்டார்கள். ஒரு விதமான வீம்பு குணம் அவர்களை உரசி பார்க்கும் அவ்வப்போது.அதே போல் நகர மக்களுக்கு அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. விளையாட்டு ஆர...

மராத்திய மண்ணின் விநாயகர் தமிழர்களின் முதற்கடவுள் ஆனது எப்படி?

     தமிழ்நாட்டில் , விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த சில வருடங்களாக ஆண்டுதோறும் பலதரப்பட்ட மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இப்பண்டிகையை இந்து முன்னணியினர் முன்நின்று பல்லாயிரக்கணக்கான நகரங்களிலும் கிராமங்களிலும் நடத்தி வருகின்றனர். இந்து முன்னணி ஏற்று நடத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழ்நாட்டில் இந்துத்துவ கொள்கைகளை நிலைநிறுத்தவும், இந்துக்களை ஒரே  போர்வையின் கீழ் ஒன்றிணைக்கவும், சங்பரிவார் கூட்டத்தின்  சனாதன கோட்பாடுகளை நிறுவவுமே தமிழர்களின் திருவிழாவாக அடையாளப்படுத்தப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி -  மராத்தியர்களின் திருவிழா!    விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த வளர்பிறை நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. சதுர் எனும் வடமொழிச் சொல் நான்கு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் நான்காவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.இவ்விழா விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி திருவிழா 1980 ஆம்  ஆண்டு வரை, தமிழகத்தில் அவ்வளவு சீரும் சிறப்பும...